இந்திய சினிமாவில் பிரமாண்ட தயாரிப்பில், பெரும் எதிர்பார்ப்பில் உருவாகிவரும் இரண்டு பெரும் திரைப்படங்கள் குறித்த அப்டேட்.
**க்ளைமாக்ஸை நெருங்கிவிட்ட கேஜிஎஃப்**
இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் உருவாகிவரும் படம் கேஜிஎஃப் சேப்டர் 2. கன்னட திரைப்படமான கேஜிஎஃப் முதல் பாகம் இந்திய அளவில் பெரிய வெற்றி பெற்றது. வசூலிலும் ராக்கி பாய் மிரட்டினார்.
புது அப்டேட் என்னவென்றால், படக்குழுவினர் கேஜிஎஃப் 2-க்கான க்ளைமாக்ஸ் காட்சிகளை உருவாக்கி வருகின்றனர். படத்துக்கு சண்டைக்காட்சி இயக்குநராக தேசிய விருது வென்ற அன்பறிவ் இரட்டையர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
மிரட்டலான சண்டைக் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. படத்தின் பெரிய எதிர்பார்ப்பே வில்லனாக அதிரா கேரக்டரில் வரும் சஞ்சய் தத் ரோல்தான். கூடுதலாக, இந்த க்ளைமாக்ஸ் ஷூட்டில் சஞ்சய் தத் & யஷ் இருவருக்குமான சண்டைக் காட்சி படமாக்கப்பட்டுவருவதாகவும் சொல்லப்படுகிறது.
**சீதாவை வரவேற்ற ராஜமெளலி**
தெலுங்கு சினிமாவிலிருந்து பாகுபலி, பாகுபலி 2 என இரண்டு பிரமாண்டங்களைக் கொடுத்த ராஜமெளலி இயக்கத்தில் தற்போது உருவாகிவரும் படம் ‘ஆர்ஆர்ஆர்’ . ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடித்துவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்துவருகிறது. படப்பிடிப்பில் அலியா பட் இணைந்துள்ளார். அதையும் படக்குழு உறுதி செய்துள்ளது. சமீபத்தில் படத்திலிருந்து இரண்டு டீசர்கள் வெளியாகி பெரிய எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது.
மிகப்பெரிய பட்ஜெட்டில் வரலாற்றுப் பின்னணியில் உருவாகிவருவதால் படத்தின் படப்பிடிப்பு கொஞ்சம் அதிகமாகவே பாக்கியிருக்கிறதாம். விரைவிலேயே அதை முடித்துவிடும் திட்டத்துடன் பணியாற்றி வருகிறார்கள் படக்குழுவினர்.
பாலிவுட்டில் உச்ச நடிகையாக இருக்கும் அலியாபட்டின் முதல் தென்னிந்திய படம் இது. அதோடு, படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அலியா.
**-ஆதினி**�,”