தெலுங்கில் இயக்குநராக அறிமுகமாகும் லோகேஷ்?

entertainment

‘விக்ரம்’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெலுங்கில் இயக்குநராக அறிமுகமாக அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் தொடர்ந்து மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் ஹைதராபாத்தில் நடிகர் சிரஞ்சீவி மற்றும் பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஆகியோரை சந்தித்து ‘விக்ரம்’ படத்திற்காக வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்குநராக தெலுங்கில் அறிமுகமாக அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரஞ்சீவி தன்னுடைய மகனும் நடிகருமான ராம் சரண் வைத்து புதிய படம் இயக்குவதற்கு லோகேஷிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும், இது குறித்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது எனவும் கூறப்படுகிறது.

இது மட்டுமில்லாமல் தெலுங்கின் ‘ஸ்டைலிஷ் ஸ்டார்’ அல்லு அர்ஜுனுக்கு லோகேஷ் கனகராஜ் ஒரு வரி கதை கூறியுள்ளதாகவும் அது அல்லு அர்ஜுனுக்கு பிடித்துள்ளதாகவும் விரைவில் எல்லாம் சரியாக அமைந்தால் அது குறித்தான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் ‘விக்ரம்’ படத்தை அடுத்து நடிகர் விஜய்யின் 67வது திரைப்படம் ‘விக்ரம்3’, ‘கைதி2’ என அடுத்தடுத்து ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கும் படங்களை கைவசம் வைத்துள்ளார். இப்பொழுது தெலுங்கிலும் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார் என்ற தகவல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

**ஆதிரா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *