‘கே.ஜி.எஃப்3’ படம் குறித்து தகவல் பகிர்ந்த தயாரிப்பு நிறுவனம்!

entertainment

யஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கே.ஜி.எஃப் 2’ படத்தின் அடுத்த பாகம் குறித்தான தகவலை அதன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு நீல் பிரசாந்த் இயக்கத்தில் யஷ் நடிப்பில் ‘கேஜிஎப்’ திரைப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பான் இந்தியா படமாக வெளியாகி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் கடந்த மாதம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் வெளியாகி 1000 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்று மாபெரும் வெற்றியை விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெற்றது. ‘கேஜிஎப் 2’ படம் நிறைவடையும்போது அடுத்த பாகமும் இருக்கும் என அதிகாரப்பூர்வமாக படத்திலேயே அறிவித்து இருந்தார்கள். இப்போது ‘கேஜிஎப் 3’ திரைப்படம் எப்பொழுது தொடங்குகிறது எப்போது வெளியீடு என்பது குறித்து அதன் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தெரிவித்துள்ளார்.

தனது முந்தைய பேட்டியொன்றில் தயாரிப்பாளர் விஜய், ‘திரைப்படம் இந்த வருடம் அக்டோபரில் தொடங்கி படப்பிடிப்பு நடைபெற்று 2024 வருடம் திரைக்கு வர திட்டமிட்டு இருக்கிறோம்’ என தெரிவித்திருந்தார். அந்த செய்தி ரசிகர்களிடையே வைரலாக பரவி இருந்தது. இந்த நிலையில் ‘கே.ஜி.எஃப்3’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘Homebale Films’-ன் Executive Producer கார்த்தி கெளடா இது குறித்து மீண்டும் தெளிவு படுத்தி உள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் ‘கே.ஜி.எஃப்3′ குறித்து ட்வீட் செய்திருக்கிறார். அதில், ”கே.ஜி.எஃப்3’ படம் குறித்தான நிறைய செய்திகள் இப்போது ரசிகர்கள் மத்தியில் பரவி கொண்டிருக்கிறது. உங்களை போலவே அந்த படத்தின் அடுத்த பாகத்திற்கு நாங்களும் எதிர்ப்பார்ப்பில் உள்ளோம். ஆனால், இப்போது உடனே நாங்கள் ‘கே.ஜி.எஃப்3′ படத்தை ஆரம்பிக்கும் எண்ணத்தில் இல்லை. ஆனால், வேலையை ஆரம்பிக்கும் போது அது குறித்தான தகவல்களை நிச்சயம் உங்களுக்கு சரியான படிக்கு தெரிவிப்போம்’ என அந்த ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

**ஆதிரா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *