சின்னத்திரைக்கு மீண்டும் வரும் ஹிட் சீரியல்கள்!

entertainment

தொலைக்காட்சியில் முன்பு ஒளிபரப்பப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கோலங்கள்’, ‘தென்றல்’ ஆகிய சீரியல்கள் மீண்டும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

ரசிகர்களின் பொழுது போக்கில் சினிமாவை போலவே சீரியல்களுக்கும் முக்கிய பங்குண்டு. அதிலும் குறிப்பாக பொதிகை, சன் தொலைக்காட்சிகள் மட்டுமே பெரும்பான்மையான மக்களின் பொழுது போக்காக இருந்த காலக்கட்டத்தில் அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்டது.

அந்த வகையில், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற சீரியல்கள் தான் ‘கோலங்கள்’ மற்றும் ‘தென்றல்’.

சமீபத்தில் ‘மெட்டி ஒலி’ சீரியல் மறுஒளிபரப்பு செய்யப்பட்ட போது கூட ரசிகர்கள் விரும்பி பார்த்தனர். அந்த வகையில் முன்பு வெற்றி பெற்ற க்ளாஸிக் சீரியல்களுக்கு இப்போதும் ரசிகர்களிடையே வரவேற்பு இருக்கிறது.

நடிகை தேவயானி சினிமாவில் இருந்து சீரியலுக்குள் நுழைந்த போது அபி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த ‘கோலங்கள்’ சீரியல் 2003-2009 காலக்கட்டத்திலும், நடிகை ஸ்ருதி துளசி என்ற கதாப்பாத்திரத்தில் 2009-2015 காலக்கட்டத்தில் ‘தென்றல்’ சீரியலும் கிட்டத்தட்ட 1200 எபிசோட்களை கடந்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று ஒளிபரப்பானது.

இப்போது இந்த சீரியல்களை மறுஒளிபரப்பு செய்யும் உரிமையை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி பெற்றுள்ளது. ‘கோலங்கள்’ சீரியல் இந்த மாதம் அதாவது மே 16 முதல் மதியம் ஒரு மணிக்கும், ‘தென்றல்’ சீரியல் 2 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளது.

’நம் மனதில் நீங்காமல் இடம் பிடித்த நம் மனதுக்கு பிடித்த சீரியல் மீண்டும் வந்து விட்டது’ என இந்த செய்தியை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைதள பக்கங்களில் அறிவித்துள்ளது.

**ஆதிரா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *