jவிஜய்யின் செயலால் பலனடையும் ஊழியர்கள்!

entertainment

பெப்சி ஊழியர்கள் பலனடையும் வகையில், ‘தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பை சென்னையில் நடத்தவேண்டும் என்று படக்குழுவை நடிகர் விஜய் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய், ரஷ்மிகா மந்தனா ஜோடி நடிப்பில் தளபதி66 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தை, தெலுங்கு இயக்குநரான வம்சி பைடிபள்ளி இயக்குகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் இப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்கிறார். இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதையடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளநிலையில், தமிழ் திரையுலகைச் சேர்ந்த பெப்சி (FEFSI) ஊழியர்கள், பலனடையும் வகையில், சென்னையில் படப்பிடிப்பு நடத்துமாறு நடிகர் விஜய் படக்குழுவை கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

75 சதவிகித படப்பிடிப்பை ஆந்திர, தெலங்கானா மாநில எல்லைக்குள் நடத்தினால் மட்டுமே பட வெளியீட்டின்போது டிக்கெட் கட்டண உயர்வு, நேரடி தெலுங்குப் படத்திற்கான தணிக்கை சான்றிதழை பெற இயலும். அதனால் 75% படப்பிடிப்பை அங்குநடத்த திட்டமிட்ட நிலையில், விஜய் கேட்டுக்கொண்டதால், சென்னையில் இருக்கும் ஸ்டூடியோ ஒன்றில் செட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பெரும்பாலான காட்சிகளை சென்னையிலும், மீதமுள்ள காட்சிகளை ஆந்திர, தெலங்கானா மாநிலங்களிலும் படமாக்க உள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்யின் இந்த செயலால் பெப்சி தொழிலாளர்கள் 200 பேர், துணை நடிகர்கள் சுமார் 500 பேருக்கு குறைந்தபட்சம் நான்கு வாரங்களுக்கு அதிகமாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

**-இராமானுஜம்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *