‘ராஜா ராணி 2 ‘ சீரியலில் இனி வருவேனா என்பது பற்றி ஆல்யா தற்போது பேசியிருக்கிறார்.
ஆல்யாவுக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு ‘Arsh’ என பெயரிட்டுள்ளனர். ரசிகர்கள் ஆல்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து வரும் அதே வேளையில் ‘ராஜா ராணி 2 ‘ சீரியலில் அவரது ரீ- எண்ட்ரி குறித்தும் கேட்டுள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ‘ராஜா ராணி’ சீரியலும் ஒன்று. முதல் சீசனின் போதே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியலின் இரண்டாவது சீசனில் ஆல்யா மற்றும் சித்தார்த் இருவரும் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்தனர். இந்த சீரியல் ஆரம்பிக்கும்போது ஆல்யாவுக்கு அய்லா குழந்தை பிறந்திருந்த சமயம். பிரசவத்தால் உடல் எடை அதிகரித்து இருந்தவர், இந்த சீரியலுக்காக உடல் எடையை குறைத்து ‘ராஜா ராணி’ சீரியலின் சந்தியா கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
இந்த நிலையில் ஆல்யா மீண்டும் கர்ப்பமாகி இருக்கிறார். தன்னுடைய ஒன்பதாவது மாதம் வரைக்குமே சீரியலில் நடித்து வந்தார். இந்த மாத இறுதியில் குழந்தையை எதிர்ப்பார்த்திருக்கும் நிலையில் அவர் சீரியலை விட்டு விலகினார்.
அவருக்கு பதிலாக ரியா என்பவர் புதிதாக உள்ளே வந்திருக்கிறார். பிரசவத்திற்கு பின் சிறிது காலத்தில் மீண்டும் ஆல்யாவே வந்து விடுவார் என முன்பு செய்திகள் வெளியானது.
இப்போது அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஆல்யாவின் ரசிகர் ஒருவர், ”ராஜா ராணி’ சீரியலில் மீண்டும் நீங்கள் வருவீர்களா? உங்களை மிஸ் செய்கிறோம்’ என கேட்டதற்கு, ‘மீண்டும் ‘ராஜா ராணி’ சீரியலுக்குள் நான் வர போவதில்லை. சந்தியா கதாப்பாத்திரம் இனி நிரந்தரமாக புது ஹீரோயின் தான் நடிக்க போகிறார்’ என சொல்லி இருக்கிறார் ஆல்யா.
பிரசவத்திற்கு பின்பு மீண்டும் வேறு புது சீரியலில் ஆல்யா எண்ட்ரி கொடுப்பீர்களா எனவும் ரசிகர்கள் கேட்டதற்கு ‘நிச்சயம் வருவேன்’ என பதில் கூறியிருக்கிறார் ஆல்யா.
**ஆதிரா**