tதிருமண புடவையை திருப்பி கொடுத்தாரா சமந்தா?

entertainment

நடிகை சமந்தா தனது திருமண புடவையை நாக சைதன்யாவிடம் திரும்ப கொடுத்துள்ளார்.

நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் கடந்த 2007ஆம் ஆண்டு கோவாவில் குடும்பத்தினர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு இருவருமே தங்களது படங்களில் கவனம் செலுத்தி வந்தனர். நாக சைதன்யாவை விட சமந்தா அதிக படங்களில் நடித்தார். இது தவிர பிசினஸிலும் ஆர்வம் கொண்ட சமந்தா ‘சகி’ என்ற பெண்களுக்கான பிரத்யேக ஆன்லைன் ஆடை வியாபாரத்தை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இது தவிர கடந்த வருடம் இவர் ‘தி ஃபேமிலி மேன்’ தொடரின் இரண்டாம் பாகத்தில் ராஜீ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்த கதாப்பாத்திரம் சமந்தாவிற்கு பல விருதுகளையும் வாங்கி தந்தது. இந்த நிலையில் தான், சமந்தாவிற்கும் நாக சைதன்யாவிற்கும் விவாகரத்து என்ற விஷயம் சமூக வலைதளங்களில் வெளியானது. ஆனால், அப்போது இதுகுறித்து இருவரும் வெளிப்படையாக எதுவும் சொல்லாத நிலையில், கடந்த வருடம் அக்டோபர் இரண்டாம் தேதி இருவருமே ஒரே நேரத்தில் தங்களது சோஷியல் மீடியா பக்கத்தில் கணவன் மனைவி என்ற உறவில் இருந்து பிரிவதாக அறிவித்தனர்.

மேலும் சமந்தா, நாக சைதன்யா குடும்பத்தில் இருந்து ஜீவனாம்ச தொகையாக எதுவும் வாங்கவில்லை எனவும் செய்திகள் வெளியானது. திருமணத்தின்போது சமந்தா நாக சைதன்யாவின் பாட்டி புடவையை சிறிது வேலைப்பாடுகளோடு அணிந்திருந்தார். அதுதான் சமந்தாவின் திருமண புடவையும். இதனையடுத்து, நாக சைதன்யாவை விட்டு விலகியதும் அந்த குடும்பத்தில் இருந்து எந்த பொருளும் வேண்டாம் என முடிவெடுத்து திருமண புடவையையும் சமந்தா திருப்பி கொடுத்துள்ளார்.

சமந்தாவின் கைவசம் தற்போது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சகுந்தலம்’ ஆகிய படங்கள் உள்ளன. இது தவிர்த்து, ஹாலிவுட் படம் ஒன்றிலும் சமந்தா எண்ட்ரி கொடுக்க உள்ளார்.

**ஆதிரா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *