Zவெற்றிமாறன் – அமீர் புதிய கூட்டணி!

entertainment

மௌனம் பேசியதே, ராம், பருத்தி வீரன் போன்ற வெற்றி படங்களையும் ஜெயம் ரவி நாயகனாக நடித்த ஆதிபகவன் படத்தையும் இயக்கிய அமீர், யோகி படத்தில் நாயகனாகவும், வட சென்னை படத்தில் தாதா கேரக்டரிலும் நடித்திருந்தார் .
ஆர்யா நடிப்பில் சந்தனத்தேவன் என்ற படத்தை இயக்குவதற்கு பூஜை போடப்பட்டு படத்தின் 50% படப்பிடிப்பு முடிவடைந்திருக்கிறது படத்தின் செலவுக்கும், வியாபாரத்திற்கும் சம்பந்தமில்லாமல் இருந்ததால் அந்தப் படம் முடங்கியுள்ளது.

நாற்காலி என்ற படத்தில் அமீர் கதை நாயகனாக நடித்து இருக்கிறார். ஆனால் படம் வெளியாகவில்லை.
இந்த நிலையில் தற்போது வெற்றிமாறனின் திரைக்கதையில் தனது புதிய படத்தை இயக்கப் போவதாக அறிவித்திருக்கிறார் அமீர். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “ஒரு திரைப்படத்தில் இன்னொருவரின் பார்வையும் சேரும்போது அந்தப்படம் மேலும் அழகாகும்” என்று தெரிவித்திருக்கும் அமீர்,
“வெற்றிமாறன் – தங்கம் ஆகிய இருவரது கதை உருவாக்கத்தில் எனது திரைக்கதை வசனம் மற்றும் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றை துவக்க உள்ளேன். இத்திரைப்படம் பற்றிய அனைத்து விபரங்களையும் விரைவில் உங்களுடன் நேரில் பகிர்ந்து கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த இரு ஆளுமைகள் இணையும் படைப்பை திரை உலகமும் ரசிகர் உலகமும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளது.

**-அம்பலவாணன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *