நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் நடிகை சாய்பல்லவி ஜோடியாக நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
‘டாக்டர்’ பட வெற்றிக்கு பிறகு ‘டான்’, ‘அயலான்’ என அடுத்தடுத்த படங்களை கைவசம் வைத்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இது மட்டுமல்லாமல், கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்திலும் அவர் நடிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் மேடையில் நிகழ்ந்தது நினைவிருக்கலாம். இந்த படங்கள் தவிர்த்து தமிழ் தெலுங்கு என பைலிங்குவல் கதையிலும் நடிக்க சிவகார்த்திகேயன் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில் தான் கமல் தயாரிப்பில் அவர் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சாய்பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சாய் பல்லவி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஷ்யாம் சிங்கா ராய்’ படத்தில் சாய் பல்லவி நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது தெலுங்கில் ராணாவுடன் ‘விரட்ட பர்வம்’ கதையில் நடித்து முடித்துள்ளார் சாய் பல்லவி.
மேலும் அவர் நடிப்பில் தமிழில் வெளியான ‘தியா’ திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறார் இயக்குநர் ஏ.எல். விஜய். இதிலும் சாய்பல்லவியே நடிக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் பாலிவுட்டிலும் அறிமுகமாவார் சாய் பல்லவி. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் உடன் இவர் ஜோடியாகும் படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இந்த படத்திற்கு இசையமைக்க ஹாரிஸ் ஜெயராஜிடமும் பேச்சுவார்த்தை போய் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
**ஆதிரா**
�,”