xபொறியியல் கட்டண உயர்வுக்குத் தமிழக அரசு தடை!

public

பொறியியல் படிப்புக்கான கட்டண உயர்வு தொடர்பான முடிவுக்குத் தமிழக அரசு இன்று (ஏப்ரல் 26) தடை விதித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா சென்னையில் ஏப்ரல் 21ஆம் தேதி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, வரும் கல்வியாண்டு முதல் அண்ணா பல்கலைக் கழக உறுப்பு கல்லூரிகளில் கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டு புதிய கட்டண முறை அமல்படுத்தப்படவுள்ளது. இதற்கான ஒப்புதல் சிண்டிகேட் கூட்டத்தில் பெறப்பட்டுள்ளது. விரைவில் புதிய கட்டண விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நியாயமான முறையில் கட்டண உயர்வு நிர்ணயம் செய்யப்படும். அண்ணா பல்கலைக் கழகத்தில் நிலவும், நிதிச் சுமைக் காரணமாகவே கட்டணம் உயர்த்தப்படுவதாகக் கூறியிருந்தார்.அதன்படி செமஸ்டருக்கு ரூ.10,000 உயர்த்தப்படவிருந்தது. மொத்தம் 8 செமஸ்ட்டருக்கு ரூ. 80,000 கூடுதலாக கட்டும் நிலை ஏற்பட்டது கடைசியாக 2000ஆம் ஆண்டு கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது கட்டணம் உயர்த்துவது தொடர்பான முடிவு அரசின் பரீசிலனைக்கு அனுப்பப்பட்டது.

அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் உறுப்பு கல்லூரிகளில் ரூ. 30 ஆயிரத்துக்கும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டால், மாணவர்களும் பெற்றோர்களும் சிரமத்துக்கு ஆளாவார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், பொறியியல் படிப்புக்கான கட்டணத்தை உயர்த்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முடிவிற்கு தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அரசு பொறியியல் கல்லூரிகளில் கட்டண உயர்வு இருக்காது என உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *