முதலமைச்சர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று மாலை மகுடஞ்சாவடியில் நடைபெற்றது. இந்நிலையில் இந்தப் பொதுக்கூட்டத்துக்கு வந்த பச்சையப்பன் என்ற தொண்டர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். நேற்று மாலை வரை ஒருவர் மட்டுமே உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. பிறகு, மேலும் ஒருவர் உயிரிழந்தார். இவர், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடம்பூரைச் சேர்ந்தவர். மேலும் பெண் எஸ்.ஐ ஒருவர் மயங்கியநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த முறை ஜெயலலிதா விருத்தாசலத்தில் பிரச்சாரம் செய்தபோதும் இருவர் பலியானது குறிப்பிடத்தக்கது.�,
+1
+1
+1
+1
+1
+1
+1