லரும் பாரம்பர்யத்துக்குத் திரும்ப ஆரம்பித்திருக்கும் காலம் இது. பாரம்பர்ய உணவுகளைத் தேடி வாங்கி உண்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. வழக்கமான, நம் உடலுக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் நொறுக்குத் தீனிகளைத் தவிர்த்துவிட்டு, ஆரோக்கியமான பாரம்பர்ய உணவு வகைகளுக்குத் திரும்பலாம். அதற்கு இந்த வித்தியாசமான ரவா பணியாரம் உதவும்.
**என்ன தேவை? **
ரவை – ஒரு கப்
அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன்
தயிர் – ஒரு கப்
துருவிய கேரட் – அரை கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் – கால் கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, கறிவேப்பிலை (மொத்தமாகச் சேர்த்து) – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் – தாளிக்கத் தேவையான அளவு
முந்திரிப்பருப்புத் துண்டுகள் – 2 டேபிள்ஸ்பூன்
சமையல் சோடா – 2 சிட்டிகை
எண்ணெய் – தேவையான அளவு உப்பு – ஒரு டீஸ்பூன்.
**எப்படிச் செய்வது?**
ரவை மற்றும் அரிசி மாவுடன் தயிர், உப்பு, சமையல் சோடா சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவிடவும். பின்னர் இதில் கேரட், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்துக் கலந்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், முந்திரிப்பருப்பு தாளித்து, இதை மாவுக் கலவையில் சேர்க்கவும். பிறகு இட்லி மாவுப் பதத்தைவிட சிறிது தளர்வாக மாவைக் கலந்துகொள்ளவும். பின்னர் பணியாரக்கல்லின் குழிகளில் சிறிதளவு எண்ணெய்விட்டு, மாவைப் பணியாரங்களாக ஊற்றி, இருபுறமும் சுட்டெடுக்கவும். தேங்காய்ச் சட்னி அல்லது தக்காளிச் சட்னியுடன் பரிமாறவும்.
**[நேற்றைய ரெசிப்பி: ரவா பக்கோடா](https://www.minnambalam.com/public/2022/06/02/1/rava-pakoda)**
.