nதிருப்பத்துக்கு தயாராகும் தமிழ் சினிமா!

public

திரைப்படங்களுக்கு மக்கள் தரும் ஆதரவும், விமர்சனங்களும் ஆரோக்கியமாக உள்ளது என்று இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்சினிமாவில் ரசிகர்களின் ஆதரவு அதிகம் உள்ள பெரும்பாலான படங்கள் விமர்சனரீதியாக வரவேற்பு பெறுவதில்லை. விமர்சனரீதியாக வரவேற்பு பெறுவதுடன் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொள்ளும் படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடுவதில்லை. தற்போது இந்த நிலை சற்று மாறத்தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களில் வெளியான படங்கள் விமர்சனரீதியாக வரவேற்பு பெறுவதுடன் திரையரங்குகளிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிவருகின்றன.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் வடசென்னை. நேற்று முன்தினம் (அக்டோபர் 17) வெளியான இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இப்படம் தொடர்பாக தமிழில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சேரன், “வடசென்னை திரைப்படத்திற்கு மக்கள் தரும் ஆதரவும், விமர்சனங்களும் ஆரோக்கியமாக உள்ளது. தமிழ் சினிமா ஒரு முக்கிய திருப்பத்திற்கு தயாராகிறது என்பது மட்டும் புரிகிறது. இனி தொடர்ந்து நல்ல படங்கள் வரும் என நம்பிக்கை வருகிறது. 96, ராட்சசன், பரியேறும் பெருமாள், வடசென்னை… தொடரும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *