இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் 100 பந்துகள் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருபது ஓவர் போட்டிகளில் 120 பந்துகள் வீசப்படுவது போல 100 பந்துகளை மட்டுமே வீசும் குறுவடிவ கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் 2020 ஆம் ஆண்டு தொடங்கவிருக்கிறது. ஏற்கனவே கபில்தேவ் முன்னின்று நடத்திய ஐசிஎல் போட்டிகளில் அனுமதியின்றி சில வீரர்கள் விளையாடியதால் சில சர்ச்சைகள் அப்போது கிளம்பின. அதனால், இந்திய வீரர்கள் இந்த 100 பந்துகள் போட்டியில் கலந்துகொள்வார்களா என்ற கேள்வி இருந்து வந்தது.
இந்நிலையில், விராட் கோலி, தோனி, ரோஹித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இதில் பங்குபெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. காரணம் தற்போது நடந்துவரும் ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவே முதலீடு செய்து வருகிறது. இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு இந்திய வீரர்களும் சென்று விளையாடும் பட்சத்தில்,இங்கிலாந்து போன்ற வெளிநாட்டினரும் ஐபிஎல்லுக்காக இங்கே முதலீடு செய்ய வாய்ப்புள்ளது என பிசிசிஐ கருதுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அந்நாட்டு வீரர்களை ஐபிஎல் போட்டியில் பங்கேற்க அனுமதி அளித்திருப்பது,அவர்கள் நடத்தும் 100 பந்துகள் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்களையும் இணைத்து நடத்த சாதகமான சூழலைத் தரும் எனக் கருதப்படுகிறது.�,