ப்ரோ கபடி லீக்கின் 5ஆவது சீசனில் இன்று (ஆகஸ்டு 27) நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் பெங்கால் அணிகள் முதல் போட்டியிலும், மும்பை மற்றும் டெல்லி அணிகள் இரண்டாவது போட்டியிலும் விளையாட உள்ளன.
ஏ பிரிவில் இதுவரை மும்பை அணி 8 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 5 தோல்வியுடன் 18 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது. டெல்லி அணியைப் பொறுத்த வரை 7 போட்டிகளில் 2 வெற்றி, 5 தோல்வியுடன் 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது. மும்பை அணியைப் பொறுத்த வரை கடந்த தொடரில் மட்டுமே அரையிறுதி வாய்ப்பினை தவறவிட்டது. அதற்கு முன்னர் நடைபெற்ற 3 சீசனிலும் அரையிறுதி வாய்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் மும்பை அணி அதன் உள்ளூர் மைதானத்தில் விளையாடுவதால் ரசிகர்கள் ஆதரவு அதிகமாக இருக்கும்.
பி பிரிவில் நடைபெறும் மற்றொரு போட்டியில் பெங்களூரு அணியும் பெங்கால் அணியும் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் 22 புள்ளிகளுடன் பட்டியலில் 3 ஆவது மற்றும் 4ஆவது இடத்தைப் பெற்றுள்ளன. இதற்கு முன்னரே இவ்விரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் பெங்களூரு அணி 31-25 என்ற புள்ளிக் கணக்கில் பெங்கால் அணியை வீழ்த்தியது. எனவே இன்றையப் போட்டியில் பெங்களூரு அணியின் ஆதிக்கம் தொடருமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.�,