ஆன்லைன் மூலமாக பணியில் சேர்க்கும் நடவடிக்கை ஜனவரி மாதத்தில் 2 சதவிகிதம் சரிவடைந்துள்ளதாக நவ்கரி.காம் வலைதளம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வேலைவாய்ப்பு வலைதளமான [நவ்கரி.காம்](https://www.naukri.com/), ஜனவரி மாதத்துக்கான பணியமர்த்துதல் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ஜனவரி மாதத்திற்கான ’நவ்கரி ஜாப் ஸீக் குறியீடு’ 1707 புள்ளிகளாக உள்ளது. இது கடந்த 2016ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் இருந்த 1,748 புள்ளிகளைவிட 2 சதவிகிதம் குறைவாகும். எனினும், மாதாந்திர அடிப்படையில், முந்தைய டிசம்பர் மாதத்தைவிட (1,659) 3 சதவிகிதம் அதிகமாகும்.
ஜனவரி மாதத்தில் அதிகபட்சமாக உள்கட்டுமானம், ஆயில், காஸ் மற்றும் மின் உற்பத்தி துறையில் 28 சதவிகித சரிவு ஏற்பட்டுள்ளது. அதேபோல, தொலைத்தொடர்பு துறையில் ஆன்லைன் மூலமாக பணியமர்த்தும் நடவடிக்கையில் 23 சதவிகித சரிவு ஏற்பட்டுள்ளது. நாட்டின் பிற முன்னணி துறைகளான கட்டமைப்பு மற்றும் பொறியியல் பிரிவில் 10 சதவிகிதமும், வங்கி மற்றும் நிதிச்சேவைகளில் 1 சதவிகித சரிவும் ஏற்பட்டுள்ளது.
நகரங்கள் வாரியாக பார்க்கும்போது, அதிகபட்சமாக டெல்லியில் 11 சதவிகிதமும், மும்பையில் 8 சதவிகிதமும் மற்றும் பெங்களூருவில் 6 சதவிகிதமும் ஆன்லைன் ஆட்சேர்ப்பில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. மாறாக, ஹைதராபாத், சென்னை மற்று புனே ஆகிய நகரங்களில் தலா 3%, 15% மற்றும் 24 சதவிகித உயர்வு ஏற்பட்டுள்ளது.�,