தொலைத் தொடர்புச் சந்தாதாரர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 120 கோடியைத் தாண்டியுள்ளது.
ஜனவரி மாதத்துக்கான மொபைல் நெட்வொர்க் இணைப்புகள் குறித்த விவரங்களைத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2018 டிசம்பரில் 119.78 கோடியாக இருந்த தொலைத் தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2019 ஜனவரி மாத இறுதியில் 120.37 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு மாதத்தில் 0.49 சதவிகிதம் கூடுதலான சந்தாதாரர்கள் நெட்வொர்க் சேவையில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். பிஎஸ்என்எல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் அதிகமான வாடிக்கையாளர்களை ஜனவரி மாதத்தில் ஈர்த்துள்ளன.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜனவரி மாதத்தில் அதிகபட்சமாக 93 லட்சம் புதிய வாடிக்கையாளர்களைத் தனது சேவைக்குள் இணைத்து சாதனை படைத்துள்ளது. பிஎஸ்என்எல் நெட்வொர்க் 9.82 லட்சம் வாடிக்கையாளர்களையும், ஏர்டெல் நெட்வொர்க் 1 லட்சம் வாடிக்கையாளர்களையும் புதிதாகச் சேர்த்துள்ளன. ஒட்டுமொத்தமாக ஜனவரி மாதத்தில் மட்டும் 59 லட்சம் புதிய சந்தாதாரர்கள் நெட்வொர்க் சேவையில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். வோடபோன் – ஐடியா மற்றும் டாடா டெலிசர்வீசஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஜனவரி மாதத்தில் 44 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன.
வயர்லைன் இணைப்புகளின் எண்ணிக்கை 2.17 கோடியிலிருந்து 2.18 கோடியாக உயர்ந்துள்ளது.�,