bசிபிஐ: ஆதாரங்களின்றி 3,268 பேர் விடுதலை!

public

கடந்த நான்காண்டுகளில் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ மூலம் 3,200க்கும் மேற்பட்டோர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு நேற்று (டிசம்பர் 27) தெரிவித்தது.

2017ஆம் ஆண்டில் 184 ஊழல் வழக்குகளில் 755 பேரை நீதிமன்றங்கள் விடுதலை செய்தது என மாநில அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் எழுத்துபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு 944 பேரும், 2015ஆம் ஆண்டு 821 பேரும், 2014ஆம் ஆண்டு 748 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த மூன்றாண்டுகளில் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பல்வேறு வழக்குகளில் விடுதலை செய்யப்பட்டனர் என மற்றொரு கேள்விக்குப் பதிலளித்தார்.

மேலும், “சிபிஐயினால் தொடரப்பட்ட 1,800 வழக்குகளில் இதுவரை 3,617 பேர் தண்டனை பெற்றுள்ளனர். 2016ஆம் ஆண்டு 503 வழக்குகளில் 1005 பேரும், 2015ஆம் ஆண்டு 434 வழக்குகளில் 878 பேரும், 2014ஆம் ஆண்டு 509 வழக்குகளில் 993 பேரும் தண்டனை பெற்றுள்ளதாகக் கூறியுள்ளார்.

மத்திய அரசு, சிபிஐ மேற்கொண்ட வழக்கு விசாரணையில் தலையிடாது. சிபிஐ வழக்குகளை ஆய்வு செய்ய தங்களுக்கென நடைமுறைகளை வகுத்துள்ளது” என்றும் கூறினார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *