உத்தரப் பிரதேசத்தில் பாம்புக் கடி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வளரிளம் பெண் ஒருவர் மீது நேற்று(நவ-3) கும்பல் பாலியல் வன்முறை நடத்தப்பட்டது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் பேரெய்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வளரிளம் பெண் ஒருவர்,பாம்பு கடித்ததற்கு சிகிச்சை பெற 5 நாட்களுக்கு முன்னதாக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆபத்தான நிலையிலிருந்ததால் மருத்துவர்கள் அவரை தீவிர சிகிச்சைப்பிரிவில் வைத்து சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர்.
நேற்று அந்த பெண் மட்டும் தனியாக தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ள படுக்கையில் உறங்கிக்கொண்டிருக்கும்போது அந்த மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு ஊழியரின் உதவியுடன் நால்வர் கொண்ட கும்பல் ஒன்று அவர் மீது பாலியல் வல்லுறவை நிகழ்த்தியுள்ளது.
இந்த கொடூரமான சம்பவம் அந்த மருத்துவமனை வளாகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்தப் பெண் மருத்துவமனையின் பொதுப்பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அந்தப் பெண் சம்பவம் குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் கும்பல் பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட மருத்துவமனையின் ஊழியரை கைது செய்தனர். மற்ற நான்கு பேரும் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருவதாக நடந்த சம்பவத்தை விசாரணை செய்து வரும் மூத்த போலீஸ் அதிகாரி சிங் தெரிவித்துள்ளார்.
இரு வாரங்களுக்கு முன்னதாக உத்தரப் பிரதேசத்திலுள்ள பாக்பாட் நகரில் தனியார் மருத்துவமனையில் நா்சிங் மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் மருத்துவமனையின் ஊழியரும் ஒரு மருத்துவக் கல்லுாரி மாணவர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.�,