திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள கே.ஜி.கண்டிகை என்ற பகுதியில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா தலைமையிலான தேர்தல் கண்காணிப்பு குழுவினர், நேற்று மாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது காரில் இருந்த பெண்ணை, ஐந்து பேர் கொண்ட கும்பல் மிரட்டி கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, திருத்தணி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், தேர்தல் கண்காணிப்பு குழுவிடம் இருந்த அவர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்து அவர்களிடம் முதற்கட்ட விசாரனை நடத்தினர். பெண் உட்பட காரில் இருந்த அனைவரும் செங்கல்பட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால், அடுத்தகட்ட விசாரணைக்காக, அவர்கள் செங்கல்பட்டு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
�,