o8 வழிச்சாலை திட்டம் – அரசு நிலைப்பாடு என்ன?

politics

சென்னை – சேலம் 8 வழிச் சாலை திட்டத்தைப் பொறுத்தவரை எதிர்க்கட்சியாக இருந்த போது இருந்த நிலைப்பாடுதான் தற்போதும் இருக்கிறது என்று அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய மயிலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார், சென்னை சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதில் அளித்துப் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு, “சென்னை சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்தில் திமுகவின் நிலைப்பாடு இப்போதும் மாறவில்லை. எதிர்க்கட்சியாக இருந்தபோது இத்திட்டம் குறித்து மக்களின் கருத்துக் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார். அதே நிலைப்பாடு தான் தற்போதும் நீடிக்கிறது. எட்டு வழிச்சாலை திட்டத்தில் மக்களின் கருத்துக் கேட்ட பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

சாலைகளை மேம்படுத்தச் சாலைப் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.. மாநில அரசின் நிதிநிலை பற்றி அனைவருக்கும் தெரிந்தது தான். உரியக் காலம் வரும்போது சாலைப் பணியாளர்களைத் தேர்வு செய்து முதல்வர் அனுமதி வழங்குவார்” என்று தெரிவித்தார்

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *