qஅப்பா முதல் மகன் வரை: முதல்வர் சொன்ன தகவல்!

politics

சென்னை நந்தம்பாக்கத்தில் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு கருத்தரங்க மாநாட்டைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(ஏப்ரல் 9) காலை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

தொழில் துறையினர் சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் தென்னிந்திய திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் இந்திய அளவில் தென்னிந்திய சினிமாவின் பங்களிப்பு , திரைப்படங்களில் தொழில்நுட்ப வளர்ச்சி , சமூக வலைதளங்கள் திரைப்படங்கள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம் , குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்பட்டு வெளியாகும் தரமான படங்களுக்கான அங்கீகாரம் வழங்குவது எப்படி , ஓடிடி தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி , பொதுமக்களை திரையரங்குகளை நோக்கி வரவழைப்பது எப்படி உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட திரைப் பிரபலங்கள் பங்கேற்று நாளை விவாதிக்க உள்ளனர். நாளை நடைபெறக்கூடிய நிகழ்வில் இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன் , மணிரத்னம் , ஏ.ஆர் முருகதாஸ் ஆகியோரும் , இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்

இந்நிலையில் இந்த கருத்தரங்கை இன்று தொடங்கிவைத்து தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அப்போது அவர், ”முதல்வராகப் பொறுப்பேற்று 11 மாதங்கள் ஆன நிலையில், தொழில்துறையில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற அடிப்படையில் துபாய், அபுதாபி சென்றுவிட்டு வந்தேன். மாநில உரிமைகளை உரிமையுடன் கேட்க வேண்டும் என்ற அடிப்படையில் டெல்லி சென்று வந்தேன். பின் முதன்முறையாக கலைத்துறையினர் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றேன் என்பது பெருமை.

திரைத்துறையுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதால் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளேன். முற்போக்கான திரைப்படங்கள் எடுக்க வேண்டும். புகைபிடிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது எனத் திரைப்படத்திற்கு முன்பு ஒளிபரப்புவது பாராட்டிற்குரியது. அதே போல் குட்கா கஞ்சா குறித்தும் விழிப்புணர்வு வாசகம் இடம் பெற வேண்டும். நானும் சினிமா துறையைச் சேர்ந்தவன்தான் நான்நாடக மேடையிலும், தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவன் என்பதை நினைவுகூர்ந்த மு.க.ஸ்டாலின், முதல்வராக என்னைப் பார்க்க வேண்டாம். உங்களில் ஒருவனாகப் பாருங்கள். அப்பா முதல் எனது மகன் வரை சினிமா துறையில் தொடர்பு உண்டு. சினிமாவையும், திமுகவையும் பிரிக்க முடியாதது போல் என்னையும், என் குடும்பத்தையும் சினிமாவில் இருந்து பிரிக்க முடியாது’ என்றார்.

**-இராமானுஜம்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *