தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஆண்ட்ரியா. இவர் நடித்துள்ள அரண்மனை 3 படம் அக்டோபர் 14ல் ரிலீஸாக உள்ளது. அதோடு மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்துள்ளார் ஆண்ட்ரியா.
இன்ஸ்டாகிராம், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமானவர். தனக்கு சரியென பட்டதை செய்யக் கூடியவர். எதிர்மறையான விமர்சனங்களை எளிதாக கடந்துபோகக்கூடியவர்
சமூக வலைதளங்களில் இவர் பதிவிட்ட ஒரு படம் சர்ச்சையை கிளப்பி உள்ளது. தாயின் வயிற்றில் கரு உருவாகும்போது இருவரையும் இணைக்கும் தொப்புள் புனிதமானது. அதனை சினிமாவில் கவர்ச்சிக்காக பயன்படுத்தி மலினப்படுத்துவதாக விமர்சனங்கள் செய்வது உண்டு அதனை உறுதிசெய்யும் வகையில் இடுப்புக்கு கீழே தொப்புளுக்கு அருகே பட்டாம்பூச்சி டாட்டூவை குத்தியுள்ள படத்தை ஆண்ட்ரியா வெளியிட்டுள்ளது தான் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
அதை பார்த்தவர்கள், ‛டாட்டூ போடுற இடமா அது? இல்லை அரண்மணை – 3 பிசாசு 2 படத்திற்கான விளம்பர யுக்தியா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
**அம்பலவாணன்**
�,”