காங்கிரஸ் இரட்டை வேடம்: திமுக கூட்டணியை விட்டு வெளியேறச் சொல்லும் வாசன்

politics

பேரறிவாளனின் விடுதலையில் காங்கிரசின் இரட்டை நிலைப்பாட்டை மேற்கொள்வதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் கூறியுள்ளார். ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளியான பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் தனக்கு இருக்கும் சிறப்பு அதிகாரத்தின்படி விடுதலை செய்த நிலையில் , இது தேசிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் தலைமை செய்தித் தொடர்பாளருமான ரந்தீப் சுர்ஜேவாலா, “பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் மோடி அரசு இரட்டை வேடம் போடுவதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் காங்கிரஸ்தான் இரட்டை வேடம் போடுவதாக ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியிருக்கிறார்.
இதுகுறித்து இன்று மே 20 ஆம் தேதி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பேரறிவாளனின் விடுதலை சம்பந்தமாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பல்வேறு காரணங்களைக் கொண்டு சட்டத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது .

அதே நேரத்தில் அந்த வழக்கில் சம்பந்தப்பட 7 பேரும் நிரபராதிகள் இல்லை என்பது , ஏற்கனவே நடந்த விசாரணையின் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளின் தீர்ப்பும் அமைந்துள்ளது .

முன்னாள் பாரதப் பிரதமர் இராஜீவ்காந்தியின் படுகொலை சம்பவத்தில் அவருடன் சேர்த்து 17 பேர்கள் , குறிப்பாக காவல்துறை அதிகாரிகளும் , காங்கிரஸ் தலைவர்களும் , தொண்டர்களும் இறந்துள்ளனர் . அவர்களின் குடும்பத்தினரின் உணர்வுகளை , மனநிலையை தமிழகத்தை ஆளும் , ஆட்சியும் , கட்சியும் அதனை சார்ந்த கூட்டணி கட்சிகளும் உணர்ந்து செயல்படவேண்டும் .

காரணம் சிறையில் உள்ள மற்ற 6 பேர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தங்களின் எண்ணத்தை வலியுறுத்தி இருக்கிறார்கள் .

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் , முன்னாள் பாரதப் பிரதமரின் கொடுரக் கொலை செயலில் ஈடுப்பட்ட பேரறிவாளின் விடுதலையில் உறுதியான , உணர்வுபூர்வமான நிலையை எடுக்காமல் , ஒருபுறம் ஒப்புக்கு போராட்டம் என்றும் மறுபுறம் பேரறிவாளின் விடுதலையை பாராட்டும் , கொண்டாடும் கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து கூட்டணி வைத்திருப்பது அவர்களின் இரட்டை நிலைப்பாட்டையையே எடுத்துக்காட்டுகிறது .

மேலும் கட்சியின் முக்கிய மூத்த தலைவர்கள் இந்த உணர்வுபூர்வமான பிரச்சனையில் வாய்மூடி வேடிக்கை பார்ப்பது பதவி நலனுக்காகவா ? அல்லது சுயநலனுக்காகவா ? அல்லது கூட்டணி நலனுக்காகவா ? என்று தெரியவில்லை . உண்மையிலேயே இராஜீவ்காந்தியின் கொலை சம்பவத்தை மறக்கவோ , மன்னிக்கவோ முடியாத நிலையில் இருப்பது உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் தான்” என்று கூறியிருக்கிறார் ஜி.கே.வாசன்.

காங்கிரஸ் கட்சியோடு இணைவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் வெளியே வரவேண்டும் என்ற நிலைப்பாட்டை முன்னிறுத்தியிருக்கிறார் வாசன்.
**-வேந்தன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *