காத்துவாக்குல ரெண்டு காதல்- விக்னேஷின் எமோஷனல் பதிவு!

entertainment

ாத்துவாக்குல ரெண்டு காதல் படம் குறித்து விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமந்தா, நயன்தாரா, விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’. இந்த மாதம் 28ம் தேதி திரையரங்குகளில் நேரடியாக வெளியாக இருக்கிறது. நேற்று படத்தின் ட்ரைய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அனிருத் இசையில், ‘நான் பிழை’, ‘டிப்பாம் டப்பாம்’, ‘டூ டூ’ உள்ளிட்ட பாடல்களும் ஹிட்.

படம் வெளிவர இன்னும் 5 நாட்களே இருக்கக்கூடிய நிலையில் இது குறித்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில், ‘இந்த பட உருவாக்கத்தில் மிக சிறந்த அனுபவமாக கடைசி இந்த ஐந்து நாட்கள் இருக்கும் என நம்புகிறேன். அனிருத்துடன் அடுத்தடுத்து வேலை செய்திருக்கிறேன். இந்த படத்தின் காட்சிகளை திரையில் பார்க்கும் போது சிறப்பான ஒவ்வொரு நடிகர்களிடம் இருந்தும் எப்படி சிறந்த நடிப்பு கிடைத்து அந்த காட்சி வேறொரு நிலைக்கு சென்றிருக்கிறது என்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த நாட்களில் படத்தின் கதையில் நானும் வாழ்ந்திருக்கிறேன்.

கடைசி ஐந்து நாட்கள் என் காதலோடு, என் குழந்தையோடு இருக்கிறேன். நிறைய பாசத்தையும் அன்பையும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் கொடுத்து இருக்கிறேன். இந்த படத்தை முடிக்க போகிறேன் என்ற சிறு வலியும் இருக்கிறது. ஆனால், வலி இல்லாமல் காதல் இல்லை’ என அதில் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதியின் காட்சிகளை அனிருத்துடன் இருக்கும்படியான புகைப்படம் ஒன்றை பகிர்ந்து கூறி இருக்கிறார்.

மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பான் இந்தியன் திரைப்படங்களுக்கு மத்தியில் ஒரு அக்மார்க் தமிழ் திரைப்படம் எங்களிடம் இருந்து நமக்காக’ என ட்வீட் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

**ஆதிரா.**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *