ராஷ்மிகாவுக்கும் தேவரகொண்டாவுக்கும் கல்யாணமா?

entertainment

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இருவருக்கும் கல்யாணம் முடிவாக உள்ளதாக பரவிய வதந்திக்கு ‘நான்-சென்ஸ்’ என்று விஜய் தேவரகொண்டா பதிவிட்டுள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு, ராஷ்மிகாவுக்கும் கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டிக்கும் நிச்சயம் ஆகியிருந்தது. ஆனால், 2018ஆம் ஆண்டே இருவரும் இந்த நிச்சயதார்த்தம் திருமணம் நோக்கிச் செல்லாது எனத் தங்களின் உறவை முறித்துக்கொண்டனர்.

இந்நிலையில், தற்போது விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா இருவரும் டேட்டிங் செய்கிறார்கள். விரைவில் திருமணம் எனச் செய்திகள் ஊடகங்களில் பரவி வந்தன. இதற்கான பதிலை மறைமுகமாக விஜய் தேவரகொண்டா தன்னுடைய சமூக வலைத்தளபக்கத்தில் தெரிவித்துள்ளார். இருவருக்கும் கல்யாணம் முடிவாக உள்ளது எனப் பரவிய வதந்திக்கு ‘நான்-சென்ஸ்’ என்று பதிவிட்டுள்ளார் விஜய் தேவரகொண்டா.

வழக்கம் போல நான்-சென்ஸ், அப்படிலாம் எதுவும் கிடையாது. நாம் இந்த மாதிரி செய்திகளை மட்டுமே விரும்புகிறோம் என குறிப்பிட்டுள்ள அவரது பதிவு பிரபலமாகியுள்ளது. ராஷ்மிகா சமீபத்தில் ஒரு பேட்டியில் திருமணம் பற்றிக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “எனக்கு தெரியவில்லை. திருமணம் செய்து கொள்ளுமளவுக்கு இன்னும் வயதாகாததால், நான் அதை பற்றி யோசிக்கவில்லை. ஆனால், பாதுகாப்பாக வைத்துக் கொள்பவராக அமைய வேண்டும் என தன் விருப்பத்தைத் தெரிவித்திருந்தார்.

இவர்கள் இருவரும் இந்தாண்டு வெவ்வேறு படங்களின் வழியாக இந்தியில் அறிமுகமாக உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

**இராமானுஜம்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *