vதிடீரென மகனை சந்தித்த தனுஷ்- காரணம் இதுதான்!

entertainment

நடிகர் தனுஷ் அவரது மகன் யாத்ராவை சந்தித்த புகைப்படம் கடந்த சில நாட்களுக்கும் முன்பு இணையத்தில் வைரலானது.

நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஷ்வர்யா தனுஷ் இருவரும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தங்களது பிரிவை அறிவித்தனர். கணவன் – மனைவி என்ற உறவில் இருந்து பிரிந்தாலும் மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுக்கு அம்மா அப்பா என்ற உறவில் இருந்து இருவரும் விலகுவதில்லை எனவும் கூறியிருந்தார்கள்.

மேலும் மகன்கள் இருவரும் தற்போது ஐஷ்வர்யா பராமரிப்பில் தான் இருக்கிறார்கள். தனுஷ் ஒரு பக்கம் ஹைதராபாத்தில் ‘வாத்தி’ படப்பிடிப்பு மற்றும் ஊட்டியில் செல்வராகவனின் ‘நானே வருவேன்’ படப்பிடிப்பு என மாறி மாறி நடித்து கொண்டிருக்கிறார்.

இதில் ‘வாத்தி படப்பிடிப்பின் பிரேக்கின் போது ஊட்டியில் ‘நானே வருவேன்’ படப்பிடிப்பில் இருந்திருக்கிறார். அப்போது தனுஷின் மூத்த மகன் யாத்ரா அவரை பார்க்க வேண்டும் என விரும்ப உடனே ஊட்டிக்கு வரவழைத்து இருக்கிறார். அந்த புகைப்படத்தை தான் தனுஷ் தற்போது இணையத்தில் பகிர அது வைரலானது. ‘இதை விட வேறு எனக்கு என்ன வேண்டும்’ எனவும் தனது பதிவில் இது குறித்தும் நெகிழ்ச்சியுடன் தனுஷ் பகிர்ந்திருந்தார்.

மேலும், ஊட்டியில் உள்ள முக்கிய இடங்களுக்கு யாத்ராவை தனுஷ் அழைத்து சென்றிருக்கிறார். இன்னொரு பக்கம் ஐஷ்வர்யா தனது வேலை தொடர்பாக ஹைதராபாத்தில் பிஸியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

**ஆதிரா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *