கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சண்டையை விலக்கிய உறவினரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட சிறுவனைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
ஓசூர் அருகே கேரட்டி நடுகொட்டாய் மலைக்கிராமத்தைச் சேர்ந்த மாதையன் என்பவரின் மூத்த மகன் கன்னியப்பனுக்கும், 17 வயது இளைய மகனுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது அதைப் பார்த்த உறவினர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சண்டையை விலக்கிவிட்டுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த 17 வயதுச் சிறுவன், வீட்டில் இருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து வந்து சுட்டதில், கிருஷ்ணமூர்த்திக்கு நெஞ்சு, கை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, கிராம மக்கள் அவரைச் சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்ற கிருஷ்ணமூர்த்தி நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறை, 17 வயது சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.�,