அண்ணாமலை பல்கலையில் தொலைதூரக் கல்வி: யுஜிசி எச்சரிக்கை!

public

சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் தொலைதூரக் கல்வியில் சேர வேண்டாம் என்று பல்கலைக்கழக மானிய ஆணையக் குழு தெரிவித்துள்ளது.

தொலை தூரக் கல்விக்கு, மத்திய அரசின் பல்கலைக்கழக மானிய குழுவின்(UGC) அங்கீகாரம் பெறுவது கட்டாயமாகும்.

இந்த நிலையில், பல்கலைக்கழக மானிய ஆணைக் குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் யு.ஜி.சி., அங்கீகாரம் பெறாமல், தொலை தூர படிப்புகளில் மாணவர்களை சேர்த்து வருகிறது. இது, தொலைதூர படிப்புக்கான ஒழுங்குமுறை விதிகளை முழுமையாக மீறும் செயல். யு.ஜி.சி. அங்கீகாரம் பெறாமல், எந்த உயர் கல்வி நிறுவனமும், தொலைதூர, திறந்த நிலை மற்றும், ஆன்லைன் படிப்புகளை நடத்த அனுமதி கிடையாது. அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு 2014- 20 15ஆம் ஆண்டு வரை மட்டுமே, தொலைதூர கல்விக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது. அதன்பின், அந்த படிப்புக்கு அங்கீகாரம் பெறவில்லை.

எனவே,யு.ஜி.சி., அங்கீகாரம் பெறாமல், அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்தும் படிப்புகள் செல்லத்தக்கதல்ல. அந்த படிப்புகளுக்கும், அதனால், வேலைவாய்ப்பு கிடைக்காமல் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கும், அந்த பல்கலைக்கழகமே முழு பொறுப்பு. எனவே, அப்பல்கலை நடத்தும் தொலை தூர கல்வியில், மாணவர்கள் சேர வேண்டாம்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *