இந்தியாவில் குறைந்து வரும் நிலத்தடி நீர்: நாசா!

public

இந்தியாவில் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு மாநிலங்களில் நிலத்தடி நீரின் அளவு குறைந்துவருவதாகப் பூமி குறித்து ஆராய்ச்சி செய்துவரும் நாசா எச்சரித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள நாசாவின் கோடார்ட் ஸ்பேஸ் ஃபிளைட் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

கோதுமை, நெல் உற்பத்திக்காகவும் பல்வேறு விவசாயப் பயன்பாடுகளுக்கு அதிப்படியான நிலத்தடி நீர் பயன்படுத்தப்படுவதால் நிலத்தடி நீரின் அளவு வெகுவாகக் குறைந்துவருகிறது. ஆண்டு முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவது இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் வழக்கமாகிவருகிறது.

பூமியின் நிலப்பரப்பு முழுவதும் கிடைக்கும் குடி நீரின் பல்வேறு மாறுபாடுகள் குறித்து செயற்கைக்கோள் கொண்டு செய்த முதல் ஆய்வு இது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *