}தர்ஷன்- ஷனம் காதல் முறிவு: மெளனம் கலைத்த ஷெரின்

entertainment

பிக் பாஸ் நிகழ்ச்சியிலும், அது முடிவடைந்த பின்னரும் பேசப்பட்டு வரும் விஷயங்களுள் ஒன்று பிக் பாஸ் போட்டியாளர்களான தர்ஷன் மற்றும் ஷெரினின் நட்புறவு.

இவர்கள் இருவரும் வெறும் நண்பர்கள் தானா, அல்லது அவர்களுக்குள் நட்பைத் தாண்டிய உறவு ஏதேனும் உள்ளதா என்று ரசிகர்கள் பலரும் தற்போது வரை விவாதித்து வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் இறுதி சுற்றுக்கு முன்னேறாமல் தர்ஷன் வெளியேறியதற்கு ஷெரின் தான் காரணம் என்று வனிதா வெளிப்படையாகவே குற்றம்சாட்டினார். இதற்கு இடையில், தர்ஷன் தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகையும், மாடலுமான ஷனம் ஷெட்டி போலீசில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து ஷனம் ஷெட்டி – தர்ஷன் பிரிவுக்கும் ஷெரின் தான் காரணம் என்று பலரும் விமர்சித்து வந்தனர். ஆனால் இது குறித்து எந்த பதிலும் கூறாமல் இருந்த ஷெரின் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலமாக விளக்கம் அளித்துள்ளார்.

அந்தப் பதிவில், “கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக என்னைப் பற்றி பல விஷயங்கள் பேசப்பட்டு வருகிறது. என்னைத் தாக்கிப் பேச வேண்டும் என்று யாராவது விரும்பினால் நீங்கள் அதை செய்யலாம். அதற்கு நானே ஒப்புதல் தருகிறேன். என்னைப்பற்றி நீங்கள் கூறும் அத்தனை விமர்சனங்களையும் ஒரு புன்னகையுடன் எதிர்கொள்வேன். ஆனால் எனது குடும்பத்தை இதிலிருந்து விட்டுவிடுங்கள்” என்று கூறியுள்ளார்.

மேலும், “முகம் தெரியாத போலி சமூக வலைதள கணக்குகளை வைத்துக் கொண்டு என்னைத் தாக்கிப் பேசுவதையும், ட்ரோல் செய்வதையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கு நான் பதிலளிக்கப் போவதுமில்லை. யாரோ செய்த தவறுக்காக என்னை குறை கூறுவதால் எனக்கு குற்ற உணர்ச்சி ஏற்படப் போவதில்லை. இதில் உங்களுடைய குறுகிய மனப்பான்மை தான் வெளிப்படுகிறது. நான் அமைதியாக இருக்கிறேன் என்பதற்காக அது என்னுடைய பலவீனம் என்று நினைக்க வேண்டாம். இந்த விவகாரத்தில் எனக்கு தொடர்பு இல்லை என்பதால் நான் பேசாமல் இருக்கிறேன்.” என்று கூறி தர்ஷன்-ஷனம் காதல் முறிவுக்குத் தான் எதிர்கொண்ட விமர்சனங்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

அத்துடன், “யாரோ இரண்டு பேர் பிரேக் அப் செய்து கொள்வதை விடவும் இந்த உலகத்தில் பல முக்கிய பிரச்னைகள் உள்ளன. எனக்கு ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. நீங்கள் என்னைப்பற்றிய எதிர்மறையான, கோபமான அவதூறு பதிவுகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். என் மீது கோபமாக இருப்பவர்கள் எனது கமெண்ட் பகுதிகளில் அதைக் கொட்டித் தீர்ப்பதால் அவர்களுக்கு அமைதி கிடைக்கும் என்றால் அவர்கள் அதை செய்யட்டும். அது ஒரு போதும் என்னையும், என் மதிப்பீட்டையும் மாற்றப்போவதில்லை.

எனக்காக சண்டை போடுபவர்களும், என்னுடன் சண்டை போடுபவர்களும் கிடைத்ததால் நான் அதிர்ஷ்டசாலி தான். இதுதான் என்னுடைய அதிகாரப்பூர்வ அறிக்கை. இதைப்பற்றிய கேள்விகளுக்கும், விமர்சனங்களுக்கும் இனிமேல் நான் பதில் கூறப் போவதில்லை” என்று குறிப்பிட்டு தனது ரசிகர்களுக்கும் அன்பு கோரிக்கை வைத்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் அனைவருக்கும் பிடித்தமான போட்டியாளராக வலம் வந்தவர் ஷெரின். தர்ஷன் மற்றும் ஷனம் தொடர்பான விவாதங்களில் ஷெரினின் பெயர் தான் அதிக அளவில் குறிப்பிடப்பட்டு வந்தது. எந்த விமர்சனத்திற்கும் விவாதத்திற்கும் ஷெரின் செவி மடுக்காமல் இருந்தபோது, நிஜமாகவே அதில் உண்மை இருக்குமா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கும் ஏற்பட்டது.

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலமாக, ‘தர்ஷன் பிரேக்-அப்பில் தொடர்பு இருப்பதால் நான் பேசாமல் இல்லை. தொடர்புபடுத்த வேண்டிய அவசியமே இல்லை என்பதால் தான் பேசாமல் இருந்தேன்’ என்பதை தெளிவுற உணர்த்தியுள்ளார்.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *