எளச்ச யானையும் இல்லை… குண்டான குதிரையும் இல்லை… உருவக் கேலியால் வீழ்த்தி விட முடியாது- ரவீந்தர் 

Published On:

| By Kumaresan M

பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் ஆட்டம் பாட்டத்துடன் தொடங்கி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர் . இதில் இரு போட்டியாளர்கள் மிகவும் கவனிக்கத்தக்கவர்கள்.

முதல் போட்டியாளராக தயாரிப்பாளர் ரவீந்தர் வந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். விஜய் சேதுபதி அவரை அறிமுகப்படுத்தி வைத்தார். இவர், புரோமோவில் எதுக்கு பிக்பாஸ் போறீங்க அப்படினு கேட்டால், என்னை நன்றாக தெரிந்தவர்களுக்குதான் நான் ரொம்ப ஜாலியான ஆளு என்கிறார்.

மேலும்,  2வது சீசனில் இருந்து கடைசி சீசன் வரை பிக் பாஸை ரிவியூ பண்ணிருக்கேன்.அதனால, நான் கண்டிப்பா ஜெயிக்க ட்ரை பண்ணுவேன் . உழைக்காம யாராலும் ஜெயிக்க முடியாது. உருவக் கேலியால் என்னை வீழ்த்தி விட முடியாது. எளச்ச யானையும் இல்லை  குண்டான குதிரையும் இல்லை. ஒரு பிளேயராகவும் விமர்சகராகவும் உள்ளே போறேன் என்று  ரவீந்தர் கூறுகிறார்.

நேற்றைய பிக்பாஸில் ஒன்பதாவது போட்டியாளராக நடிகர்  ரஞ்சித்  வந்தார்.  ரஞ்சித் பேசுகையில், என்னை பல படத்தில் பல பல பெயரில் பார்த்து இருப்பீர்கள். ஆனால், முதன் முதலாக ரஞ்சித்தாக என்னைப் பார்க்கலாம். இந்த நிகழ்ச்சிக்கு சிலர் பெயருக்காக வருவார்கள், பணத்திற்காக வருவார்கள் எனக்கு இவை அனைத்தும் இருக்கிறது. இருந்தாலும் அன்பை விதைப்பதற்காக இங்கு வந்துள்ளேன் என்றார்.

அப்போது, இடை மறித்த விஜய் சேதுபதி, நீங்கள் தயாரித்த பீஷ்மர் படம் பார்த்தேன் அந்த படத்தில் நீங்கள் ஒரு நண்பராக தெரிந்தீர்கள். ஆனால் கவுண்டம்பாளையம் படத்தில் வேறு ஒரு ரஞ்சித்தை நான் பார்த்தேன் என்றார். இதற்கு, ரஞ்சித்  ஏதோ பேசி சமாளித்தார்.

தொடர்ந்து, நீங்கள் இந்த நிகழ்ச்சியில் உண்மையாக இருப்பீர்களா? என்று விஜய் சேதுபதி  கேட்க, நான் உண்மையாக இருப்பேன் என்று ரஞ்சித் பதிலளித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 வாரத்தின் முதல் நாளன்று குறைந்த தங்கம் விலை!

சோகத்தில் முடிந்த வான் சாகசம் : 250 பேர் மயக்கம்…5 பேர் பலி – மருத்துவர் சொல்வது என்ன?

 

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share