வல்லமை : விமர்சனம்!

Published On:

| By uthay Padagalingam

premji vallamai movie review april 25

பிரேம்ஜியின் சென்டிமெண்ட் நடிப்பு ஈர்க்கிறதா?

ஒருகாலத்தில் தமிழில் இளம் இயக்குனராக அறிமுகமாகவிருந்தவர் பிரேம்ஜி. பிறகு, இசையின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பினார். அவரது இசையில் கணிசமான படங்கள் வந்திருக்கின்றன. அதில் ஹிட் ஆல்பமான ‘பார்ட்டி’ கிட்டத்தட்ட எட்டாண்டுகளுக்கும் மேலாக தியேட்டர்களில் வெளியாகாமல் காத்துக் கிடக்கிறது. premji vallamai movie review april 25

அத்தனைக்கும் மேலே, ‘நகைச்சுவை நடிகர்’ என்பதே பிரேம்ஜியின் பிரதான அடையாளமாக இருந்து வருகிறது. இத்தகைய சூழலில், அவர் ஒரு திரைப்படத்தில் சென்டிமெண்ட் காட்சிகளில் நடித்தால் எப்படியிருக்கும் என்ற கேள்வியை எழுப்பியது ‘வல்லமை’ திரைப்படம் குறித்த தகவல்கள்.

பதின்ம வயதைத் தொட்ட ஒரு சிறுமியின் தந்தையாக, ஒரு பெருநகரத்தில் வாழும் எளிய மனிதனாக, தான் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையொன்றைச் சமாளிக்க வழி தெரியாமல் திணறுபவராக, பிரேம்ஜியை காட்டியது ‘வல்லமை’ பட ட்ரெய்லர்.

கருப்பையா முருகன் இப்படத்தை எழுதி இயக்கித் தயாரித்திருக்கிறார்.

இந்த படத்தில் பிரேம்ஜியின் சென்டிமெண்ட் நடிப்பு நம்மை ஈர்க்கிறதா?

’பாலியல் அத்துமீறல்’ கதை! premji vallamai movie review april 25

கிராமத்தில் இருந்து பெருநகரத்திற்குத் தனது பதின்ம வயது மகளை அழைத்துக்கொண்டு வருகிறார் ஒரு தந்தை. அவருக்குக் காது கேளாமை பிரச்சனை இருக்கிறது. மகளைத் தவிர இந்த உலகில் அவருக்கு வேறு ஏதும் தெரியாது.

உழைப்பதற்குத் தன்னிடம் இருக்கும் வேட்கையை வைத்துக்கொண்டு, எவ்வளவு நலமாக மகளை வாழ வைக்கலாம் என்றெண்ணுகிற ஒரு சாதாரண மனிதராக இருக்கிறார். அப்படியொரு நபர், ஒரு அசாதாரணமான சூழலை எதிர்கொள்ள நேரிடுகிறது.

அவரது பதின்ம வயது மகள் பாலியல் அத்துமீறலுக்கு ஆளானதாகச் சொல்கிறார் பெண் மருத்துவர். அவரை மயக்க நிலையில் ஆழ்த்தி அது நிகழ்ந்ததாகக் கூறுகிறார்.

சில நாட்களாக மகள் மந்தமாக இருப்பதன் காரணம் புரியாமல் இருந்த அந்த மனிதர், அது தெரிந்ததும் அதிர்கிறார். அதற்குக் காரணமானவரை என்ன செய்வது? என்னென்னவோ அவருக்குள் தோன்றுகின்றன.

ஆனால், ‘எதுவுமே செய்ய முடியாது என்பதுவே தனது உண்மையான நிலை’ என்றிருக்கிறார்.

அப்படியொரு சூழலில், ‘எனக்கு என்ன நடந்துச்சுன்னு டாக்டர் சொன்னதை கேட்டேம்பா. அந்த ஆளை நாமளே கொல்லணும்’ என்கிறார் அந்த மகள். premji vallamai movie review april 25

அதன்பிறகு அந்த தந்தை என்ன முடிவெடுத்தார் என்கிறது ‘வல்லமை’யின் மீதி.

’ஒரு சாதாரணமானவன் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பழி தீர்க்க முடிவெடுத்த கதை’ என்று இதனைச் சொல்லலாம். ’ரிவெஞ்ச் ட்ராமா’ வகைமையில் அமைய ஏற்ற உள்ளடக்கம் இது.

இதனை ‘கமர்ஷியல் சினிமாவுக்கான அம்சங்கள்’ ஏதுமில்லாமல், பெண் குழந்தைகளும் அவர்களது பெற்றோர்களும் பார்த்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் படம் அமைய வேண்டுமென்று மெனக்கெட்டிருக்கிறார் இயக்குனர் கருப்பையா முருகன்.

ஆனால், அவரது நோக்கத்தைப் பூர்த்தி செய்கிற அளவுக்குத் திரைக்கதையை அவரே நேர்த்தியாக அமைக்கவில்லை என்பதுதான் வருத்தம் தரும் விஷயம்.

எடுத்துக்கொண்ட கதையில் பிரதான பாத்திரங்கள் எவை, அதற்கு அடுத்த நிலையில் உள்ளவை எவை, அவற்றை எவ்வளவு நிமிடங்கள் திரையில் காட்ட வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் ஏதுமில்லாமல் திரைக்கதை உருவாக்கப்பட்டிருப்பது ‘வல்லமை’யின் பெரும்பலவீனம்.

பிரேம்ஜி நடிப்பு! premji vallamai movie review april 25

இப்படத்தில் சரவணன் என்கிற பாத்திரத்தில் பிரேம்ஜி நடித்திருக்கிறார். தனது வழக்கமான ‘ஸ்டைலிஷ்’ சேட்டைகளுக்கு லீவு விட்டுவிட்டு, இதில் அமைதியாக வந்து போயிருக்கிறார். ஆனாலும், அது போதுமானதாக இல்லை. முக்கியமாக, மகளின் நிலை கண்டு கலங்கிய மனதோடு அவர் இருக்கிறார் என்ற உணர்வு நமக்கு ஏற்படுவதே இல்லை.

அந்த நேரத்தில், வெங்கட்பிரபுவின் கால்ஷீட் கேட்டு சென்ற இயக்குனர் கொஞ்சம் தடுமாறி பிரேம்ஜியை நடிக்க வைத்துவிட்டாரோ? இந்த சந்தேகம் படம் பார்க்கிறபோதே நம்முள் எழுகிறது.

இதில் பிரேம்ஜியின் மகளாக, பூமிகா எனும் பாத்திரத்தில் திவ்யதர்ஷினி நடித்திருக்கிறார். இயக்குனர் கொடுத்த வசனத்தைப் பேசி, அந்த பாத்திரமாகத் திரையில் தெரிய மெனக்கெட்டிருக்கிறார்.

இது போன்ற படங்களில் ‘இவரா, அவரா’ என்று ஒவ்வொரு பாத்திரமாகத் திரைக்கதையில் காட்டி, ரசிகர்களைச் சுற்றலில் விடுவதுதான் இயக்குனர்களின் இயல்பு.

இப்படத்தில் அப்படி போராளி திலீபன், சுப்பிரமணியன் மாதவன், விது உள்ளிட்ட சிலரது பாத்திரங்கள் அதற்கேற்றவாறு இருந்தாலும், அந்த வாய்ப்பு வீணடிக்கப்பட்டிருக்கிறது.

இதில் சூப்பர்குட் சுப்பிரமணி, தீபா சங்கர், வழக்கு எண் சேதுராமன் உட்பட மொத்தம் ஒரு டஜனை விட கொஞ்சம் அதிக எண்ணிக்கையில் பாத்திரங்கள் தலைகாட்டியிருந்தால் ஆச்சர்யம்தான்.

இதில் வில்லனாக சி.ஆர்.ரஜித் என்பவர் நடித்திருக்கிறார். அவருக்கும் கூடத் திரையில் முக்கியத்துவம் தரப்படவில்லை.

இது போன்ற திரைக்கதைகளைத் தாங்குகிற வகையில் பின்னணி இசை அமைய வேண்டும். பாடல்கள் இருக்க வேண்டும்.

இப்படத்திற்கு ஜிகேவி இசையமைத்திருக்கிறார்.

அவரது இசையமைப்பில் ‘மகளே என் மகளே’ என்ற பாடலை இயக்குனர் வெங்கட்பிரபு பாடியிருக்கிறார். அது காட்சியமைப்போடு பொருந்தி நிற்கிறது. மற்றபடி பின்னணி இசை மனதை ஆட்கொள்ளும் வகையில் அமையவில்லை.

ஒளிப்பதிவாளர் சூரஜ் நல்லுசாமி, படத்தொகுப்பாளர் சி.கணேஷ்குமார், கலை இயக்குனர் எஸ்.கே. அஜய் உட்படப் பல தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு இதில் அடங்கியிருக்கிறது.

பல காட்சிகளில் ஷாட்கள் ‘யதார்த்தம்’ மிளிர ஆவணப்பட பாணியில் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவற்றை ஒரு சரமாகக் கோர்த்து மாலையாக்கும் இயக்குனர் கருப்பையா முருகனின் முயற்சி வெற்றியடையவில்லை.

அதற்குப் படத்தின் பட்ஜெட் உட்படப் பல காரணங்கள் இருக்கலாம். எதுவாக இருந்தாலும், எடுத்த கதைக்குத் தகுந்த நியாயங்களைச் செய்யும் வகையில் இப்படத்தின் திரை வடிவம் இருந்திருக்க வேண்டும். அது நிகழவில்லை. premji vallamai movie review april 25

பிரேம்ஜி நடிப்பில் ‘சத்தியசோதனை’ என்ற படம் சமீபத்தில் வெளியானது. அதில் ஒரு கனமான சமூகப்பிரச்சனை மிக லேசான ‘திரைக்கதை ட்ரீட்மெண்ட்’டில் சொல்லப்பட்டிருந்தது. அப்படத்தில் பிரேம்ஜியின் நடிப்பு சில இடங்களில் பிசிறடித்தாலும் பல காட்சிகளில் ரசிக்கும்படியாக இருந்தது.

அதனை ஒப்பிடுகையில், ‘வல்லமை’யில் பிரேம்ஜி தனது வழக்கமான உடல்மொழியைக் கைவிட்டு, அப்பாத்திரமாக மாறப் பெரும்பிரயத்தனப்பட்டிருக்கிறார். அதற்கேற்ற பலன் திரையில் வெளிப்படாத அளவுக்குப் படத்தின் உள்ளடக்கம் அமைந்திருக்கிறது. அந்த பெரும்பலவீனமே நம்மை ஈர்க்காமல் இப்படம் விலகிச் செல்லக் காரணமாகிறது. premji vallamai movie review april 25

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share