மகளிர் உரிமை தொகை: ரூ.1000 வரவு வைக்கும் பணி துவக்கம்!

Published On:

| By Selvam

கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கும் பணி இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நாளை கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்.

மொத்தம் 1.065 கோடி பயனாளிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைய உள்ளனர். மகளிர் உரிமை தொகை திட்டத்தில் அதிகளவிலான நிதிப்பரிவர்த்தனை நடைபெற உள்ளதால் நிதித்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் திட்டம் தொடங்கப்படும் ஒரு நாளைக்கு முன்னதாக பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. பயனாளர்களுக்கான நிதி பல்வேறு பொதுத்துறை வங்கிகள் மூலம் அனுப்பப்படுகிறது.

இதற்கான குறுஞ்செய்தி பயனாளிகள் தொலைபேசிக்கு சென்றுள்ளது. மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பெண்கள் ரூ.1000 பணத்தை வங்கிகளில் எடுத்துக்கொள்ளலாம். முன்னதாக சோதனை அடிப்படையில் பயனாளிகளின் வங்கி கணக்குக்கு ரூ.1 மற்றும் 10 பைசா நேற்று அனுப்பப்பட்டது. வரும் செப்டம்பர் 18-ஆம் தேதி வரை பயனாளிகளின் வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட உள்ளது.

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் குறுஞ்செய்தி வந்த 30 நாட்களுக்குள் இசேவை மையத்தை அணுகி மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செல்வம்

சென்னை: ஒப்புதல் பெறாத கட்டிடங்களுக்கு அனுமதி?

தனுஷ், சிம்பு, விஷால், அதர்வாவுக்கு ரெட் கார்டு!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share