தென் மாவட்டங்களில் மழை!

Published On:

| By Selvam

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (ஜனவரி 22) தென்‌ தமிழக மாவட்டங்கள்‌, டெல்டா மற்றும் அதனை ஓட்டிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளின்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்‌ என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், உள்‌ மாவட்டங்களில்‌ குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல்‌ 3 டிகிரி செல்‌சியஸ்‌ குறைவாக இருக்கக்கூடும்‌.

தமிழ்நாடு, புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ அதிகாலை வேளையில்‌ லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

light to moderate rain fall in south tamilnadu

நீலகிரி, கோயம்புத்தூர்‌ மற்றும்‌ திண்டுக்கல்‌ மாவட்டங்களின்‌ மலைப்பகுதிகளில்‌ இரவு நேரங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ உறை பனிக்கு வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. ஓரிரு இடங்களில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

செல்வம்

வேங்கைவயல் நீர்தேக்கத் தொட்டியை இடிக்க உத்தரவு!

சந்தானத்தின் கிக் டிரெய்லர்: என்ன ஸ்பெஷல்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share