சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையில், புதிய அரசு பொறுப்பேற்றது முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் இன்று 2 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த அமல்ராஜ் ஐபிஎஸ், சென்னை பெருநகர காவல் ஆணையராகவும்,
சென்னை பெருநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் சென்னை, குற்றப்பிரிவு சிஐடி (Crime Branch CID) கூடுதல் காவல்துறை இயக்குனராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
