திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக தலைவரான முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டால் அவரை எதிர்த்து தவெக கூட்டணி வேட்பாளராக போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ (Vaiko) விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் மதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று ஜூன் 27-ந் தேதி நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில், திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் வைகோ. அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும் வைகோ அளித்த பதில்களும்:
கேள்வி: திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளதா?
வைகோ: வாய்ப்பே இல்லை..
கேள்வி: திமுக கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டால் நீங்கள் அவரை எதிர்த்து போட்டியிட வாய்ப்பிருக்கிறதா?
வைகோ: ஹஹா.. இதெல்லாங்க.. கற்பனையான….. யூகங்கள்.. கனவிலும் கூட நினைக்காத யூகங்கள்.. ஒரு சதவீதம் கூட வாய்ப்பு கிடையாது. வைகோவாவது அங்கே போய் நிற்கிறதாவது.. அதுவும் அவரை எதிர்த்து.. அது மாதிரி எல்லாம் நான் தவறு செய்யமாட்டேன். இவ்வாறு வைகோ கூறினார்.
