காலமானார் புதுச்சேரி கண்ணன்- அவர் செய்த சாதனை இதுதான்!

Published On:

| By christopher

puthuvai kannan died at yesterday night

புதுச்சேரி முன்னாள் அமைச்சரும், முன்னாள் சபாநாயகருமான  கண்ணன் நேற்று (நவம்பர் 5) இரவு உடல் நலக் குறைவால் காலமானார்.

புதுச்சேரி என்ற குறுகிய பகுதியில் இருந்து அரசியல் செய்தாலும் இந்தியா முழுதும் அறியப்படும் ஆளுமையாக திகழ்ந்தவர் கண்ணன்.

74 வயதான கண்ணன், இளைஞராக இருந்தபோது அனைவராலும் போற்றப்படும் காமராஜருடன் பயணித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரத்தின் போது காமராஜர் பேசுவதற்கு முன்பு கண்ணன்தான் பேசுவார்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் இளைஞர் காங்கிரஸ் தலைவராக சஞ்சய் காந்தி இருந்த போது கண்ணன் புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் தலைவராக பணியாற்றினார்.

அப்போது சஞ்சய் உடன் நெருக்கமாக இருந்துள்ளார், அப்போது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி குடும்பத்திற்கு நல்ல பரிச்சயமானவராக ஆனார் கண்ணன்.

1985- 1990 இல்  புதுச்சேரி பாரூக் மரைக்காயர் அமைச்சரவையில் கண்ணன் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த போது 30 சட்டமன்றத் தொகுதிக்கும் நடைப்பயணமாக சென்று மக்களை சந்தித்து காங்கிரஸ் கட்சிக்கு பெரும் ஊக்கம் சேர்த்தார்.

அதைத் தொடர்ந்து மூன்று முறை அமைச்சராகவும், ஒரு முறை சபாநாயகர், ஒரு முறை எதிர்கட்சி தலைவராக பணியாற்றினார்.

தான் அரசியலில் அதிகாரத்தில் இருந்தபோது ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெற்று கொடுத்துள்ளார்.

அதற்காக  அவர்களிடம் ஒரு ரூபாய்  கூட லஞ்சமாக வாங்கியதில்லை.  அதுவே  இன்றைக்கும் ஆயிரக்கணக்கான  குடும்பங்களில் அவர் நன்றியோடு  நினைவுகூரப்பட  காரணமாக இருக்கிறது.  இதை கண்ணன் மூலமாக காவல் துறை பணிக்கு வந்து இன்று அதிகாரிகளாக இருப்பவர்கள் நன்றியோடு சொல்கின்றனர்.

அரசியல் காலசூழ்நிலையால் மூப்பனார் காங்கிரஸில் இருந்து பிரிந்த போது அவருக்கு ஆதரவு கொடுத்தார். அதன் பிறகு புதுச்சேரி மக்கள் கட்சி என்ற தனிக் கட்சியைத் துவங்கினார்.

பின்னர் 2016ஆம் ஆண்டு அதிமுகவிலும், கடந்த 2021 ஆண்டு பாஜகவிலும் என மாறி மாறி பயணித்து அரசியலை வெறுத்து ஒதுங்கினார்.

மேலும் அப்போது அவரது உடல் நிலையும் ஒத்துழைக்கவில்லை. அடிக்கடி மூச்சு திணறல் பிரச்சினை.  அதைத் தொடர்ந்து நுரையீரல் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

நிமோனியாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு 9:51 மணி அளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

புதுவை கண்ணன் காலமானார்... தலைவர்கள் அஞ்சலி!

தான் உயிரோடு இருந்த போதே  தனது பிள்ளைகளுக்கு அரசியல் வேண்டாம் என்று கூறிவிட்டார் கண்ணன். மகளை மருத்துவராகினார், மகனை பிசினஸில் வழிகாட்டினார்.

இப்போதுள்ள அரசியல் வியாபாரமாகிவிட்டது, சாதி அரசியல் தலைத்தூக்கிவிட்டது, அதனால் அந்த அரசியல் வேண்டாம் என்று முடிவெடுத்தார்  கண்ணன்  என்கிறார்கள் கடைசி வரையில் அவரோடு பயணித்தவர்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

வணங்காமுடி

எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4வது நாளாக நீடிக்கும் சோதனை!

வேலைவாய்ப்பு: இந்தியன் வங்கியில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share