‘காலாவதி ஆக வேண்டியது ஆளுநர் பதவி மட்டுமே’: அமைச்சர் பொன்முடி

Published On:

| By christopher

திராவிடம் வந்த பிறகு தான் சனாதனம் என்று ஒன்று காலாவதியானது. ஆகையால் காலாவதி ஆக வேண்டியது ஆளுநர் பதவி மட்டுமே என அமைச்சர் பொன்முடி விமர்சித்துள்ளார்.

சென்னை கிண்டியில் தொழில் நுட்ப இயக்ககம் சார்பாக பொறியியல் படிப்புக்கான உதவி மையத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று (மே 5) தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், ”உயர்கல்வித்துறையில் மாணவர்களின் சேர்க்கை கடந்த ஆண்டை விட இந்த வருடம் 53 சதவீதம் அதிகரித்துள்ளது.

புதுமை பெண் திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட முயற்சியில் பல பெண்கள் கல்வி வளர்ச்சியில் முன்னேறியுள்ளனர்.

கல்லூரிகளின் பட்டமளிப்பு விழாவில் பேசும் போது, தமிழ்நாட்டின் கல்வி நன்றாக உள்ளது என்றே பலமுறை ஆளுநர் ரவி பேசியுள்ளார். ஆகையால் தற்போது தவறாக கூறிவரும் ஆளுநரை நாங்கள் குறிப்பிட்டுள்ளவற்றில் ஏதேனும் தவறு இருந்தால் நிரூபித்து காட்ட சொல்லுங்கள்” என்றார்.

மேலும் அவர், ”ஆளுநர் என்பவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். அவர் அரசியல் பேசுவது தவறான ஒன்று. ஆனால் இப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு அரசியல்வாதியாக மாணவர்களிடையே சனாதனத்தை திணித்து வருகிறார்.

மாநில அரசு என்ன சொல்கிறதோ அதன் அடிப்படையில் செயல்படுவது ஆளுநரின் வேலை. திராவிடம் என்பது தமிழகத்தில் மட்டுமல்ல உலகத்திற்கே ஏற்ற ஒரு கொள்கையாகும். திராவிடம் வந்த பிறகு தான் சனாதனம் என்று ஒன்று காலாவதியானது. ஆகையால் காலாவதி ஆக வேண்டியது ஆளுநர் பதவி மட்டுமே” என்றார்.

கிறிஸ்டோபர் ஜெமா

’ஓடவிட்டு சுடலாமா’: திரையுலகம் காணாத புதுமை!

பிடிஆர் ஆடியோ முதல் ஸ்டாலின் வீடியோ வரை: சர்ச்சை தொடங்கி முடிந்த பின்னணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share