இசக்கி சுப்பையா 2-வது முறையாக ராஜினாமா கடிதம்- கைப்பட எழுதிய கடிதத்தை பெற்றார் சபாநாயகர்!

Published On:

| By Mathi

Isakki Subbiah’s Resignation

அதிமுக (AIADMK) எஸ்பி வேலுமணி அணி அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா (Isakki Subbiah) தமது பதவியை ராஜினாமா செய்வதாக 2-வது கடிதத்தை இன்று மே 26-ந் தேதி சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் கொடுத்தார்.

முன்னதாக இசக்கி சுப்பையா தமது பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் கொடுத்தார். ஆனால், ”தட்டச்சு செய்யப்பட்டு கையெழுத்திடப்பட்ட அந்த ராஜினாமா கடிதத்தை ஏற்க முடியாது” என சபாநாயகர் திருப்பி அனுப்பி விட்டார்.

ADVERTISEMENT

இதனையடுத்து 2-வது முறையாக கைப்பட எழுதிய ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து கொடுத்தார் இசக்கி சுப்பையா.

இதனால் ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 4 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே அதிமுகவின் மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். பின்னர் தவெகவில் இணைந்தனர். இந்த 3 பேரின் ராஜினாமா ஏற்கப்பட்டு 3 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

அத்துடன், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா கடிதங்களை ஏற்கக் கூடாது என சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Mathi

நான் 1993-ம் ஆண்டு முதல் இதழியல் துறையில் பணிபுரிகிறேன். அச்சு, இணையம், காட்சி, ஒலி என அனைத்து ஊடகத் துறையிலும் பணியாற்றிய அனுபவம் இருக்கிறது. தமிழின் பழம் பெரும் நாளேடான தினமணியில் செய்தியாளராக பணியை தொடங்கினேன். உலகின் முதல் தமிழ் செய்தி இணையதளமான தற்போது பயன்பாட்டில் இல்லாத ‘இன்தாம்’ இணையத்தில் செய்திப் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினேன். இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா தமிழ் வானொலியின் இந்திய பொறுப்பாளராக, சன் நியூஸ் செய்தி சேனலில் சிறப்பு தொகுப்பு ஆசிரியராக, ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தில் இணை ஆசியராக தற்போது மின்னம்பலத்தில் பணியாற்றுகிறேன்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share