கர்நாடகா முதல்வர் பதவியை சித்தராமையா (Siddaramaiah) ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து அம்மாநில முதல்வராக துணை முதல்வரான டிகே சிவகுமார் (DK Shivakumar) பதவியேற்க உள்ளார்.
கர்நாடகாவில் 2023 தேர்தலில் காங்கிரஸ் வென்று ஆட்சியை கைப்பற்றியது. அப்போதே முதல்வர் பதவிக்காக டிகே சிவகுமார் முயற்சிகளை மேற்கொண்டார். இதனையடுத்து காங்கிரஸ் மேலிடம், டிகே சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவி அளித்தது.
தற்போது 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் சித்தராமையாவை மாற்றிவிட்டு டிகே சிவகுமாருக்கு முதல்வர் பதவியை தர வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இதனால் கர்நாடகாவில் அரசியல் குழப்பம் தொடர்ந்து நீடித்து வந்தது.
இந்நிலையில் காங்கிரஸ் மேலிட உத்தரவை ஏற்று முதல்வர் பதவியை சித்தராமையா இன்று ராஜினாமா செய்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, 3 ஆண்டுகளில் 150-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளேன். ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்குவதாக டெல்லி மேலிடம் தெரிவித்திருந்தது. ஆனால் இதனை நான் ஏற்கவில்லை என்றார்.
