கட்சி பதவிகள் பறிப்பு விவகாரம்.. அதிமுகவின் முக்கிய அறிவுறுத்தல் என்ன?

Published On:

| By Mathi

AIADMK Warns

அதிமுகவில் (AIADMK) கட்சி பதவிகள் பறிக்கப்பட்டவர்கள் தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palaniswami) முக்கிய அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

அதிமுகவில் எஸ்பி வேலுமணி தலைமையில் 25 எம்.எல்.ஏ.க்கள், முதல்வர் விஜய் அரசுக்கு ஆதரவு அளித்தனர். இதனையடுத்து எஸ்.பி. வேலுமணி அணியினரின் கட்சி பதவிகளை பறித்து புதியவர்களை நியமித்தார் எடப்பாடி பழனிசாமி.

ADVERTISEMENT

தற்போது அதிமுகவின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பலரும் எடப்பாடி பழனிசாமி அணிக்கே திரும்பிவிட்டனர்.

இந்நிலையில் இன்று மே 28-ந் தேதி அதிமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில், “பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களின் பழைய பொறுப்புகளை கொண்டு பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டாம்.. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Photo of author
Mathi

நான் 1993-ம் ஆண்டு முதல் இதழியல் துறையில் பணிபுரிகிறேன். அச்சு, இணையம், காட்சி, ஒலி என அனைத்து ஊடகத் துறையிலும் பணியாற்றிய அனுபவம் இருக்கிறது. தமிழின் பழம் பெரும் நாளேடான தினமணியில் செய்தியாளராக பணியை தொடங்கினேன். உலகின் முதல் தமிழ் செய்தி இணையதளமான தற்போது பயன்பாட்டில் இல்லாத ‘இன்தாம்’ இணையத்தில் செய்திப் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினேன். இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா தமிழ் வானொலியின் இந்திய பொறுப்பாளராக, சன் நியூஸ் செய்தி சேனலில் சிறப்பு தொகுப்பு ஆசிரியராக, ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தில் இணை ஆசியராக பணிபுரிந்தேன். தற்போது மின்னம்பலத்தில் பணியாற்றுகிறேன்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share