விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரிப்பு- கரூர் செய்திகளால் கவலை.. முதல்வர் ஸ்டாலின்

Published On:

| By Mathi

Karur Vijay Meeting

தவெக தலைவர் நடிகர் விஜய்யின் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 29 பேர் பலியான சம்பவம் மற்றும் கரூரில் இருந்து தொடர்ந்து வரும் செய்திகள் கவலை அளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர்

ADVERTISEMENT

@V_Senthilbalaji, மாண்புமிகு அமைச்சர்

@Subramanian_Ma அவர்களையும் – மாவட்ட ஆட்சியரையும் தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளேன். அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்

ADVERTISEMENT

@Anbil_Mahesh அவர்களிடமும் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன். அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகைளை மேற்கொள்ள ADGP-யிடமும் பேசியிருக்கிறேன். பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், மருத்துவமனைகளுக்கு 29 உடல்கள் இதுவரை கொண்டுவரப்பட்டுள்ளன. தொடர்ந்து பலரது நிலைமை கவலைக்கிடமாக தெரிவிக்கப்படுகிறது. சேலம், திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் குழு கரூருக்கு விரைந்துள்ளன என்றார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share