தமிழக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா மற்றும் நிர்மல் குமார் ஆகியோருக்கு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் (Sabareesan) ’வக்கீல் நோட்டீஸ்’ அனுப்பி உள்ளார்.


அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு வழக்கறிஞர் மூலம் அனுப்பிய நோட்டீஸில், “சட்டசபை தேர்தலுக்கு முன்பிருந்தே சபரீசன் குறித்து ஆதாரமற்ற, உண்மைக்கு புறம்பான கருத்துகளை தொடர்ந்து ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் இருவரும் பேசி வருகின்றனர். இருவரும் தங்களது கருத்துகளை திரும்பப் பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
