தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி நியமனம்: மறுபரிசீலனை செய்ய வேண்டுகோள்!

Published On:

| By Pandeeswari Gurusamy

CPI Veerapandian

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ‘ஜனநாயகன்’ படத் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் இந்த முடிவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ADVERTISEMENT

“தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக, கர்நாடக அரசியல் செல்வாக்குடன், பெங்களூருவை மையமாகக் கொண்டு தொழில் நடத்தி வரும் வெங்கட் கே. நாராயணா நியமனம் செய்யப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நியமனம் தமிழ்நாட்டில் பெரும் வாதப்பிரதிவாதங்களை உருவாக்கி, கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

தமிழ்நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக நிலைகள் பற்றிய புரிதலோ அல்லது கலை, இலக்கியம், பண்பாட்டுத் துறைகளிலோ போதிய அறிவோ இல்லாத ஒருவர், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாகச் செயல்படுவதைப் பொதுமக்கள் ஏற்க மாட்டார்கள்.

ADVERTISEMENT

எனவே, இதனைக் கருத்தில் கொண்டு அவரது நியமனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், அதற்குப் பதிலாகப் பொருத்தமான வேறொரு பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசின் முதலமைச்சரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.”

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share