காவிரி டெல்டா (Cauvery Delta) மாவட்டங்களில் இன்று கனமழை (Heavy Rain) பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி, வடதமிழக கடலோரப் பகுதிகளின் வளிமண்டல சுழற்சியால்
- தஞ்சாவூர்
- திருவாரூர்
- நாகப்பட்டினம்
- மயிலாடுதுறை
ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- புதுக்கோட்டை
- கடலூர்
- விழுப்புரம்
- திருவண்ணாமலை
- பெரம்பலூர்
- அரியலூர்
- கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரையில்.. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
