ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் உள்ள காஜா மொய்னுதீன் சிஸ்தியின் நினைவிடத்தில் சமர்ப்பணம் செய்வதற்காக மலர்ப்போர்வை ஒன்றைக் காணிக்கையாக வழங்கியுள்ளார் மோடி.
இந்த மலர்ப்போர்வையைப் பெற்றுக்கொண்ட மத்திய சிறுபான்மையின நல அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, நாளை காலை அஜ்மீர் நகருக்குச் சென்று, மலர்ப்போர்வையைத் தர்கா நிர்வாகிகளிடம் ஒப்படைப்பார் எனத்தெரிகிறது.
மலர்ப்போர்வையுடன் சமூக நல்லிணக்கத்துக்கான வாழ்த்துச்செய்தியையும் மோடி இணைத்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.
