திருவைகுண்டம் அருகே பெண்ணை தவெக நிர்வாகிகள் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சி அளிப்பதாக திமுக (DMK) துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கனிமொழி எம்.பி. தமது எக்ஸ் பக்கத்தில், “திருவைகுண்டம் அருகே பெண் ஒருவர், தவெக நிர்வாகிகள் இருவரால் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் செல்லப்பட்டு, மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
பெண்கள் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ள இன்றைய சூழலில், தேர்தல் காலத்தைப் போல திமுகவின் மீது பழி போடுவதை நிறுத்திவிட்டு, தாங்கள் தான் ஆளுங்கட்சி என்பதை உணர்ந்து ‘பொறுப்புடன்’ முதலமைச்சர் விஜய் செயல்பட போவது எப்போது?” என கேள்வி எழுப்பி உள்ளார்.
