போட்டி அரசாங்கம் நடத்த ஆளுநர் பகிரங்க முயற்சி – மு.வீரபாண்டியன்

Published On:

| By Pandeeswari Gurusamy

CPI

“மக்கள் தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஆளுநர் மாளிகையை அணுகலாம் என்று ஆளுநர் பேசியிருப்பது, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் ஆட்சிக்கு எதிராக, ஒரு போட்டி அரசாங்கம் நடத்தும் பகிரங்க அறிவிப்பாகும்” என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்றைய தினம் (04.07.2026) ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஒரு நூல் வெளியீட்டு விழாவில், மக்கள் தங்களது பிரச்னைகளுக்குத் தீா்வு காண ஆளுநா் மாளிகையை அணுகலாம். அவர்களது கோரிக்கைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம் என பேசியிருப்பதும், சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளைக் கண்டறிந்து, அவற்றை சரி செய்ய முயற்சி செய்பவர்கள் தங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் ஆளுநர் மாளிகையில் முறையிடலாம் என்று ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் பேசியிருப்பது, ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் ஆட்சிக்கு எதிராக, ஒரு போட்டி அரசு நடத்த நினைக்கும் பகிரங்க அறிவிப்பாகும்.

ADVERTISEMENT

ஆளுநரின் இந்த செயல் மாநில அரசின் நிா்வாகத்தில் நேரடியாக தலையிடும் அதிகார அத்துமீறலாகும். ஆளுநரின் அதிகார அத்துமீறல் நடவடிக்கையை தமிழக அரசும், முதல்வரும் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த காலத்தில், தமிழக அரசு நடத்திய சட்டப் போராட்டத்தில் ஆளுநா் அதிகாரம் குறித்து தெளிவாகவும், திட்டவட்டமாகவும் வரையறுத்து உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அரசியலமைப்புச் சட்டம் ஆளுநருக்கு வழங்கியுள்ள அதிகார எல்லையையும், உச்சநீதிமன்றத்தின் தீா்ப்புகளையும் மதிக்காமல் செயல்படும் ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகரின் அத்துமீறலை குடியரசுத் தலைவா் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share