திமுக எம்.எல்.ஏ-வுக்கு ஜாமீன்- ’ஷாக்’ நிபந்தனைகள்!

Published On:

| By Mathi

Conditional Bail Granted to DMK MLA G.V. Markandayan

விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனைகளுடன் இன்று ஆகஸ்ட் 3-ந் தேதி ஜாமீன் வழங்கி உள்ளது.

கோவில்பட்டி பொதுக் கூட்டத்தில், ”சட்டசபை கதவுகளை மூடினால் முதல்வர் விஜய் எலும்புகளை உடைப்போம்” என பேசியதற்காக விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் ஜூலை 20-ந் தேதி கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

ADVERTISEMENT

பின்னர் மார்க்கண்டேயன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தூத்​துக்​குடி முதலா​வது குற்​ற​வியல் நீதித்​துறை நடு​வர் மன்​றம் ஜூலை 22-ந் தேதி டிஸ்மிஸ் செய்தது. இதனையடுத்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் 2-வது முறையாக மார்க்கண்டேயன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவும் தள்ளுபடியானது.

இந்நிலையில் தமக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மார்க்கண்டேயன் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று ஆகஸ்ட் 3-ந் தேதி விசாரித்த நீதிபதி இளந்திரையன், மார்க்கண்டேயனுக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கினார்.

ADVERTISEMENT
  • எதிர்காலத்தில் முதலமைச்சருக்கு எதிராக இதுபோன்று சர்ச்சைக்குரிய வகையில் பேசமாட்டேன் என்று மார்க்கண்டேயன் எழுத்துப்பூர்வமாக உறுதிமொழிப் பத்திரம் (Affidavit) தாக்கல் செய்ய வேண்டும்
  • தூத்துக்குடி காவல் நிலையத்தில் சட்டசபை கூட்டத் தொடர் நடக்கும் நாட்களைத் தவிர மற்ற நாட்களில் தினமும் 2 முறை ஆஜராக வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share